தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து மூன்று கோயில்களில் கொள்ளை! - ஆம்பூர் அருகே அடுத்தடுத்து மூன்று கோயில்களில் கொள்ளை

வேலூர்: மேல்வெங்கட சமுத்திரம் மற்றும் மோதகபல்லி பகுதியிலுள்ள மூன்று கோயில்களில் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

vellore temple money theft

By

Published : Nov 23, 2019, 2:53 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்வெங்கட சமுத்திரம் பகுதியில் ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில், முருகன் கோயில் மற்றும் மோதகபல்லி பகுதியிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில்களில் பூட்டை உடைத்து உண்டியலில் வைக்கப்பட்டிருந்த பணம், சாமி அலங்கார வெள்ளிப் பொருட்கள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயுள்ளன.

இதில் மேல்வெங்கட சமுத்திரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கொள்ளையர்கள் சேதப்படுத்தியதோடு, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேமித்து வைக்கும் ஹார்டு டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

கோயில் பணம் கொள்ளை

அடுத்தடுத்துள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மூன்று கோயில்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: பெண் பக்தரை அறைந்த அர்ச்சகரை கைது செய்யக்கோரி ஆர்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details