தமிழ்நாடு

tamil nadu

அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருட்டு!

திருப்பத்தூர்: அடுத்தடுத்த இரு வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகை, 750 கிராம் வெள்ளி, 25 ஆயிரம் ரொக்கபணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Jan 20, 2020, 7:48 PM IST

Published : Jan 20, 2020, 7:48 PM IST

திருப்பத்தூர் திருட்டு வழக்கு கந்திலி திருட்டு வழக்கு திருப்பத்தூர் நகை திருட்டு Thirupattur Jewel Theft Thirupattur Theft Case Kandhili Theft
Thirupattur Jewel Theft

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் அருகேயுள்ள மோட்டூர் கிராமத்தில் வசித்து வரும் தங்கவேல் மனைவி கமலா (45). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்று சவரன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி கொலுசு, ஐந்து ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதேபோல், அதேப்பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவன் என்பவரது வீட்டிலும் ஐந்து சவரன் தங்க நகை, 20 ஆயிரம் ரொக்கம், 350 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்படிருந்தது.

திருட்டு நடந்த வீடு

தகவலறிந்து வந்த கந்திலி காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து இரு வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

விளையாட்டில் கிடைத்த வெற்றி, உற்சாகத்தில் உயிரிழந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details