தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடிவேலுவின் 'சீப்பு காமெடி' போல் வேலூர் தேர்தலை நிறுத்த முயற்சி! - Theft incident

வேலூர்: வாக்குச்சாவடியில் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, 11 கணினிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

vellore

By

Published : Aug 4, 2019, 2:42 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தல் நாளை நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியாத்தம் அடுத்த காந்திநகர் பகுதியில் கே.வி. குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மையங்களில் 30ஆவது வாக்குச்சாவடி மையம் உள்ளது.

இந்த வாக்குச் சாவடி மையம் உள்ள பள்ளி வகுப்பறையில் நேற்றிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமராவையும் பள்ளியிலிருந்த 11 கணினிகளையும் திருடிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை கிராம நிர்வாக பணியாளர் பள்ளியை வந்து பார்த்தபோது சிசிடிவி கேமரா, கணினிகள் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சிசிடிவி கேமரா, கணினிகள் திருட்டு
இது குறித்து குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஏற்கனவே வேலூர் தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் நடைபெறவுள்ள நிலையில் வாக்குச் சாவடியில் வைக்கப்பட்ட கேமரா, கணினிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"சீப்பை திருடிவிட்டோம்... சீப்பில்லாமல் மாப்பிள்ளை எப்படி தலைவாருவாரு; எப்படி தாலி கட்டுவாரு" என்ற வைகைப்புயல் வடிவேலுவின் இங்கிலீஸ்காரன் படத்தைப் போல...'கேமராவையும் கணினியையும் திருடிவிட்டோம்; இனி எப்படி தேர்தல் நடக்கும்' என்பதைப் போல் இச்சம்பவம் உள்ளதாக வேலூர் மக்கள் நகைச்சுவையாக பேசிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details