தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிர்ணயித்த கட்டணத்தை குறைந்து மணல் எடுக்க உதவுங்கள் - மாட்டு வண்டி உரிமையாளர்கள் - Bullock carts stopped and protested at Bala

பாலாற்றில் குறைந்த விலையில் மணல் அள்ள அனுமதிக்க கோரி சுமார் 50-க்கும் மேற்பட்ட மாண்டு வண்டி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை குறைந்து மணல் அள்ள கோரிக்கை- தொழிலாளர்கள் போராட்டம்!!
அரசு நிர்ணயித்த கட்டணத்தை குறைந்து மணல் அள்ள கோரிக்கை- தொழிலாளர்கள் போராட்டம்!!

By

Published : Jan 4, 2023, 8:52 PM IST

அரசு நிர்ணயித்த கட்டணத்தை குறைந்து மணல் அள்ள கோரிக்கை- தொழிலாளர்கள் போராட்டம்!!

வேலூர்:வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அரும்பருதி பாலாற்று பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியில் மாட்டு வண்டிக்கு மணல் விற்பனை செய்ய இன்று முதல் அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், ஒரு மாட்டு வண்டிக்கு 0.25 யூனிட்டுக்கு ரூ.800 கட்டணம் நிர்ணயித்ததாகவும், இந்த தொகைக்கு மணல் விலை நிர்ணயித்தால் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும்; ஆகவே அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் குறைத்து ரூ.250 என நிர்ணயிக்கக்கோரி சுமார் 50-க்கும் மேற்பட்ட மாண்டு வண்டி உரிமையாளர்கள், மணல் குவாரி அருகே பாலாற்றில் மாட்டு வண்டிகளை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் DSP திருநாவுக்கரசு மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக மனு அளிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து பாலாற்றில் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கூறுகையில், 'மணல் குவாரி அமைப்பது தொடர்பாக நீதிமன்றம் விதித்த உத்தரவை அரசு மதிக்கவில்லை, எங்களுக்கு ரூ.105 வரை பில் போட்டு வந்த நிலையில் தற்போது ரூ.800 ஒரு வண்டிக்கு விற்கப்படும் என கூறுகிறார்கள்.

இந்த மணல் குவாரியில் இருந்து ஒரு நாளைக்கு 4 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் போகிறது. ஆனால், 200 யூனிட் போவதாக கணக்கு காட்டுகிறார்கள். 5 ஹெக்டேர் அனுமதி கொடுத்த நிலையில் தற்போது 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மணல் எடுத்துள்ளார்கள். அரசு போர்வையில் தனிநபர் பல கோடி கொள்ளை அடித்து வருகிறார். பாலாற்றை சின்னாபின்னம் ஆக்கிவிட்டார்கள். அரசு அதிகாரிகள் காவல் துறையை வைத்து மிரட்டுகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட உள்ளோம். மாட்டு வண்டிக்கு அனுமதி கொடுத்த இடத்தில் லாரி வைத்து நடத்துகிறார்கள். எப்போதுமே நேரடியாக ஆற்றில் இருந்து தான் மணல் எடுக்க அனுமதிப்பார்கள். ஆனால், தற்போது புதியதாக குவாரியில் உள்ள நபர்களிடம் வாங்கச் சொல்கிறார்கள். விலை குறைத்து நேரடியாக ஆற்றில் அள்ள அனுமதிக்க வேண்டும்’ என மாண்டு வண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'பணி பாதுகாப்பு வழங்குக' - டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்ஆர்பி செவிலியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details