தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் சிறைக்குள் ராஜ்யம் நடத்தும் கஞ்சா கடத்தல் கும்பல்- அதிகாரிகள் அதிரடி சோதனை

வேலூர் : மத்திய சிறைக்குள் சோதனை செய்ய வந்த சிறப்பு குழு அதிகாரிகளை கைதிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் வேலூர் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மத்திய சிறை

By

Published : Mar 24, 2019, 11:38 PM IST

வேலூர் மத்திய சிறையில் சமீபகாலமாக கஞ்சா, செல்போன் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கைதிகள் வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, கஞ்சா மற்றும் செல்போன் உள்ளிட்ட நடமாட்டத்தை கண்காணிக்க வேலூர் மத்திய சிறையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிறைக்குள் சிறைக்கைதி குணா என்பவர் கைதிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகிப்பதாக சிறப்புக்குழு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சிறப்புக்குழு அதிகாரிகள் சிறைக்கைதி குணா இருக்கும் அறைக்குள் நேற்று அதிரடி சோதனை நடத்த முயன்றபோது குணா, தன்னிடம் கஞ்சா எதுவும் இல்லை என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். சிறப்புக்குழு அதிகாரிகள் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ,சிறைக்கைதி குணாவின் நண்பர்களான விக்கி(25), சந்தோஷ்(26), கோபி(27), சூர்யா(28) மணிகண்டன், சதாம் உசைன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு குணா மற்றும் அவரது நண்பர்கள் சிறையில் இருந்த பல்புகளை உடைத்து கலாட்டாவில் ஈடுபட்டனர். மேலும், தகராறு செய்ததோடு சிறைக் காவலர் ஒருவரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறப்பு குழு அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து சிறை ஜெயிலரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே வேலூர் மத்திய சிறை துணைச் ஜெயிலர் குப்புசாமி இது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், குற்றவாளி குணா மற்றும் அவரது நண்பர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சிறைக்குள் சோதனை செய்ய வந்த சிறப்புப் குழு அதிகாரிகளை கைதிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் வேலூர் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது விசாரணைக் கைதிகளாக உள்ள நபர்களுக்கு சிறைக்குள்ளேயே அதிகாரிகளை எதிர்க்கும் அளவுக்கு எப்படி தைரியம் வந்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்துக்கு பின்னால் பெரும் பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details