ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதமாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முழுமையாக தண்ணீர் வரவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.