வேலூர்:குடியாத்தம் அடுத்த ஜீவாநகரை சேர்ந்த முனியப்பன் மகன் சுரேஷ்( 11 ) இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதனிடையே நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக தனது வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். செதுக்கரை பகுதியில் சென்ற போது வேலூரில் இருந்து கே.ஜி.எப் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார்.