தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழையை சேமிக்கக் கோரி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்! - வேலூரில் சைலேந்திரபாபு பேட்டி

வேலூர்: மழை நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சைலேந்திரபாபு ஐபிஎஸ் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

மழையை சேமிக்கக் கோரி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்!

By

Published : Oct 21, 2019, 11:25 AM IST

ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றும் சைலேந்திரபாபு ஐபிஎஸ், அரசுப் பணியைத் தவிர்த்து பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணம் சென்றார்.

அதன்படி சென்னை பூந்தமல்லியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு வந்த அவரை பொது மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை லயன்ஸ் கிளப் சார்பில், மழைநீர் சேமிப்பு குறித்து சைக்கிள் பயணம் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

மழையை சேமிக்கக் கோரி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்

மேலும் பேசிய அவர், அடுத்த கட்டமாக இந்தியாவின் மேற்குப் பகுதியான குஜராத் மாநிலத்திற்கும், அதைத் தொடர்ந்து அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சைக்கிள் பயணம் மேற்கொள்வோம் என்றும், செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் மரங்களை நட்டு மழைநீரை சேமிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் கூறினார்.

இதையும் படியுங்க:

தமிழில் கவிதையை வெளியிட்ட மோடி!

ABOUT THE AUTHOR

...view details