வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்து தமிழ்நாடு-ஆந்திரா மாநில எல்லைப் பகுதிகளில் மோர்தானா அணை அமைந்துள்ளது. ஆந்திராவில் அதிகளவு மழை பெய்து வருவதால் மலைகள் வழியாக மோர்தானா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அணைக்கு பின் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் ராட்சத மலைப் பாம்பு ஒன்று சிறிய குட்டை நீரில் விலங்குனை விழுங்கி கொண்டு அசைய முடியாமல் அங்கேயே ஊர்ந்து சென்றுள்ளது. அதனை, இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த காட்சி குடியாத்தம் பகுதிகளில் சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதில் அனகோண்டா வந்து விட்டதாக பீதியை கிளப்பி வருகின்றனர்.