தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 20, 2019, 9:39 AM IST

ETV Bharat / state

ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பைப்  போராடி பிடித்த வனத்துறையினர்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சுமார் ஏழு அடி நீளமுள்ள மலைப் பாம்பை பொதுமக்கள் உதவியுடன் மின்விளக்கு இல்லாத இடத்திலிருந்து, மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு வனத்துறை பிடித்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Python caught by forest officers
Python caught by forest officers

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பார்சனா பள்ளிப் பகுதியில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சுமார் ஏழு அடி நீள மலைப்பாம்பு உள்ளதாக, வனத்துறையினருக்கு பார்த்திபன் என்பவர் தகவல் கொடுத்தார்.

அத்தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெருமாள் ஆகியோர் நிலத்தில் மின்விளக்கு இல்லாதபோதிலும் டார்ச் லைட்டைப் பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அந்த மலைப்பாம்பை பிடித்தனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க:' பட்டியலினத்தைச் சேர்ந்த நீ, பொதுத் தொகுதியில் போட்டியிடலாமா? ' - மிரட்டிய தேர்தல் அலுவலர்

ABOUT THE AUTHOR

...view details