தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 7, 2020, 5:44 PM IST

ETV Bharat / state

அம்மனாங்குட்டை பகுதியில் குப்பைகளை எரிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

வேலூர்: அம்மனாங்குட்டை பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் குப்பைகளை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிப்பதற்காக அம்மனாங்குட்டைக்கு கொண்டுவரப்படுகின்றன. ஆனால் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் தரம் பிரித்த பின்னர் அங்கேயே தீ வைத்து எரித்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை எரிக்கக்கூடாது எனக் கூறி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொதுமக்கள் போராட்டம்

இதனால் இன்று (அக்.7) அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: பூங்காவில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தடுப்புச் சுவர் - பொதுமக்கள் வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details