தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்கொலைக்கு முயன்ற சிறைக் கைதி: காவல் துறை விசாரணை!

வேலூர்: மத்திய சிறையிலிருந்த கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

By

Published : Jun 22, 2020, 2:14 PM IST

தற்கொலைக்கு முயன்ற கைதி
Vellore prisoner attempt suicide

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாந்தகுமார் (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் வன்புணர்வு செய்து ஏமாற்றியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சாந்தகுமாரை கடந்த 4ஆம் தேதி போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை சிறை ஜன்னல் கம்பியை எடுத்து தனது வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து சாந்தகுமாரை மீட்ட மத்திய சிறை காவலர்கள் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து சிறைத் துறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறைக்குகைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details