தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எருது விடும் விழாவில் நேர்ந்த பரிதாபம்: காளை முட்டி முதியவர் உயிரிழப்பு! - எருது விடும் விழா

வேலூர்: பென்னாத்தூர் அருகே எருது விடும் விழாவின் போது காளை முட்டியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

pity-at-the-bullfighting-ceremony-old-man-dies-in-the-beating-of-the-bull
pity-at-the-bullfighting-ceremony-old-man-dies-in-the-beating-of-the-bull

By

Published : Feb 24, 2021, 7:28 PM IST

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகேவுள்ள கேசவபுரம் கிராமத்தில் நேற்று (பிப். 23) எருது விடும் விழா நடைபெற்றது. அச்சமயம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலரை மாடு முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.

இதில் இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த செல்வம் (62) என்ற முதியவர் காளை முட்டியதில் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மீட்ட அருகிலிருந்தவர்கள், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காளை முட்டி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூர் தனியார் பருத்தி கிட்டங்கியில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details