தமிழ்நாடு

tamil nadu

வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவம்

By

Published : Oct 18, 2021, 12:18 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உடல்நலக் குறைவு காரணமாக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்றுவருகிறார்.

Perarivalan
Perarivalan

திருப்பத்தூர்:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்குச் சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்திருந்தார்.

அதன்படி, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட நிலையில், மே 28ஆம் தேதி சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பேரறிவாளனுக்குத் தொடர் மருத்துவம் அளிக்கப்பட்டுவருவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.

தொடர்ந்து உடல் நலம் சீராகாததால் அவர் தற்போது பரோலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், தனது பெற்றோருடன் இருந்து மருத்துவம் பெற்றுவருகிறார்.

சிறுநீரகத் தொற்று, ரத்த அழுத்தம், மூட்டு, கண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிடி (CT), எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுக்கப்பட்டுவருகிறது.

பலத்த காவல் துறை பாதுகாப்போடு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட பேரறிவாளனை மருத்துவர்கள் பரிசோதித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை

ABOUT THE AUTHOR

...view details