தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: காங்கிரசார் யாத்திரை - vellore district news

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஏர் கலப்பை பேரணி நடத்தினர்.

காங்கிரசார் யாத்திரை
காங்கிரசார் யாத்திரை

By

Published : Dec 2, 2020, 8:58 PM IST

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் தொண்டர்கள் மாடுகள், ஏர்கலப்பைகளுடன் யாத்திரை நடத்த முயன்றனர்.

அப்போது சுமார் 50-க்கும் மேற்பட்ட காங்கிரசாரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தற்போது போராட்டக்காரர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரசார் யாத்திரை

சென்னை

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட சென்னை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஏர் கலப்பை பேரணி நடத்தினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகம் ஏர் கலப்பை பேரணி நடத்தினர்.

அப்போது அக்கட்சியின் தொண்டர்கள் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் போராட்டம்; டி.ராஜா பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details