இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து - ஒருவர் பலி - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
வேலூர்: பாலூர் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் சரவணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வேலூர் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (45). இவர் பேர்ணாம்பட்டில் இருந்து பாலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தர். அப்போது மசிக்கும் அருகே வந்தபோது அவரது வாகனம் மீது மண் லோடு ஏற்றி வந்த டிராக்டர் மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சரவணன் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இறந்த தந்தையின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்!