திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அர்பாண்ட குப்பம் கிராமத்தில் வசித்துவருபவர் அம்சா என்ற மூதாட்டி (65). இவர், பிறப்பிலிருந்தே தோல் வியாதியால் மிகவும் பாதிப்படைந்துள்ளார். 65 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்துவருகிறார்.
அதுமட்டுமின்றி உணவு மற்றும் உடை என வாழ்வாதாரம் ஏதுமில்லாமல் மோசமான நிலையில் வாழ்க்கையை கடத்தி வந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மோகன் என்பவர் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வழியாக இவர் குறித்த தகவலை பதிவிட்டார். இந்த செய்தி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் வைரலானது.