தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 2:11 PM IST

ETV Bharat / state

"கொள்கை ரீதியாக பாஜக சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும்" - ஏ.சி சண்முகம்!

இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொள்கை ரீதியாக பாஜக சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Etv Bharatகொள்கை ரீதியாக பாஜக சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும்
ஏசி சண்முகம்

கொள்கை ரீதியாக பாஜக சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும்

வேலூர்:தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்றும் இதனை காவல்துறை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகவும் ரங்காபுரத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், ரங்காபுரத்தில் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், செய்தியாளர்களிடம் பேசியதாவது, "ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீச முடியும் என்ற தைரியம் ஏற்பட்டுள்ளது.

இதனை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். எதை பண்ணாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற தைரியம், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கூலிப் படைகள் அதிகரித்துள்ளது. காவல்துறையினர் மீது இருக்கின்ற பயம் குறைந்ததால் தான் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் நடந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் காணப்பட்டது. தற்போது அவை குறைந்துள்ளது. இருந்தபோதிலும் தமிழக மீனவர்கள் எல்லைப் பகுதியை கடக்காமல் பாதுகாப்பாக மீன்பிடிக்க செல்ல வேண்டும். இலங்கையில் சில பொருட்கள் எளிதாக கிடைக்கிறது என்பதற்காக எல்லை தாண்டி செல்கிறார்கள். இதனால், இலங்கை அரசு கைது செய்கிறது. இந்நிலையில், தற்பொழுது சிறை பிடித்துள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க:தீபாவளி சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை! வழக்கை விசாரிக்க அரசு உத்தரவு! என்ன நடக்கப் போகிறது?

கடந்த காலங்களை விட தற்போது தமிழகத்தில் பாஜக அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. அண்ணாமலை சுற்றுபயணம் முடிந்த பின்பு அதனுடைய வளர்ச்சி இரட்டிப்பாக இருக்கும். கொள்கை ரீதியாக பாஜக சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும். உலகத் தலைவர்களில் ஒருவராக நரேந்திர மோடி கருதப்படுகிறார். அவரின் செயல்களை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

வெற்றி தோல்வி என்பதை விட யார் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் நடக்கிறது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும் என்பதுதான் புதிய நீதி கட்சியின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜக சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும். தற்போது நடைபெறுகின்ற மாநில தேர்தல்களில், பா.ஜ.க 3 அல்லது 4 மாநிலங்களில் வெற்றி பெறும்.

மேலும், குற்ற சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் குற்றச்சாட்டுகள் அதிக அளவில் குறைந்துள்ளது. மாநில அரசுகள் போதிய அளவில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பல இடங்களில், அந்தந்த மாநிலங்களில் தீவிரச் சம்பவம், தீவிரவாத சம்பவம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:"இந்துக்களின் வழிபாட்டிடத்தை கல்குவாரியாக்க விடமாட்டோம்" - பொங்கியெழும் இஸ்லாமியர்கள்

ABOUT THE AUTHOR

...view details