வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், தனக்கு ஆறு நாள் பரோல் விடுப்பு வழங்கக்கோரி இன்றோடு 15-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு உடல் சோர்வு காரணமாக நேற்று மாலை ஒரு குளுக்கோஸ் போடப்பட்டுள்ளது. இதுவரை மூன்று குளுக்கோஸ் முருகனுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
முருகன் பழங்களை மட்டுமே உண்டு வருவதாகவும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து வருவதாகவும் சிறை மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் உண்ணாவிரதம் உள்ள முருகனுக்கு 3 குளுக்கோஸ்! - முருகன் உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனக்கு ஆறு நாள் பரோல் வழங்கக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சிறையில் உண்ணாவிரதம் உள்ள முருகனுக்கு 3 குளுக்கோஸ் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வேலூர் மத்திய சிறையில் 13ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்