தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 7, 2019, 2:53 PM IST

ETV Bharat / state

மாணவியை கேலி செய்த இளைஞர் - கம்பத்தில் கட்டி வைத்து உதை!

வேலூர்: ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கேலி செய்த இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை கேலி செய்த இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து உதை.!!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மோதக பள்ளி பகுதியை சேர்ந்தவர் குமரேசன்-கவிதா தம்பதி. இவர்களின் மகன் பரத் வருமா(18), இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி பரத் வருமா அவருடைய கிராமத்திற்கு அருகே உள்ள பாசன பள்ளி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த அங்க்கியாபள்ளியை சேர்ந்த சிவமூர்த்தி என்பவரின் மகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவியின் தந்தை சிவமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் பாசனபள்ளி பேருந்து நிலையம் அருகே நேற்று இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த பரத் வருமாவை வலுக்கட்டாயமாக அவர்களுடைய கிராமமான அங்க்கியா பள்ளி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த கம்பத்தில் பரத்தை கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த உமராபாத் காவல்துறையினர் கட்டிவைத்து தாக்கப்பட்ட அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மாணவியை கேலி செய்த இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து உதைத்த உறவினர்கள்

பின்னர் மாணவியின் தந்தை சிவமூர்த்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து பரத் வருமா காவல்நிலையத்தில் உள்ளதை அறிந்து வந்த அவரது தாய் கவிதா, தனது மகனை 5 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று சாதிப் பெயரைச் சொல்லி கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். தொடர்ந்து சிவமூர்த்தியின் உறவினர்கள் 3 பேரை கைது செய்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details