வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 24 மணி நேரமும் செயல்படும் கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு மையத்தை தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.
இதில், வேலூர், காட்பாடி, சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 1912, 1800 4258 912 என்ற எண்களுக்கு புகார் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் கே.சி வீரமணி புகார் மையத்தில் அமர்ந்து வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.