2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, முந்திரி போன்றவை அடங்கிய பரிசுத் தொகுப்பு, ரூ.2 ஆயிரத்து 500 பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
பொங்கல் பரிசு
இதனைத் தொடர்ந்து, வேலூரில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் இன்று (ஜன. 04) இத்திட்டத்தினை தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
அதிமுகவின் திட்டங்கள்
அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "முதலமைச்சர் கடந்த ஆண்டு பொங்கலுக்கு அனைத்து மதத்தினருக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கியதை போன்றே, இந்த ஆண்டும் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் பணமும், அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, முழு கரும்பு ஆகியவற்றை வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.