வேலூர், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் காலித் அகமத் (எ) பாபுல் (40). மதுபோதையில் இருந்த இவர், நேற்றிரவு (ஜூலை.27) வீட்டில் தனியாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
இதையடுத்து சிறுமி தண்ணீர் எடுக்க வீட்டின் உள்ளே சென்றபோது, காலித் அகமத் வீடு புகுந்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தொடர்ந்து சிறுமி வலியால் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளர். இதனையடுத்து காலித் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.