தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்சோவில் கைது - சிறுமி பாலியல் வன்புணர்வு

வேலூர்: மதுபோதையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

arrest
arrest

By

Published : Jul 28, 2021, 4:20 PM IST

வேலூர், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் காலித் அகமத் (எ) பாபுல் (40). மதுபோதையில் இருந்த இவர், நேற்றிரவு (ஜூலை.27) வீட்டில் தனியாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

இதையடுத்து சிறுமி தண்ணீர் எடுக்க வீட்டின் உள்ளே சென்றபோது, காலித் அகமத் வீடு புகுந்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தொடர்ந்து சிறுமி வலியால் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளர். இதனையடுத்து காலித் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய காலித்தை கண்டுபிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'ஏ கிளாஸ்' அறை கேட்ட சிவசங்கர் பாபா - 'நோ' சொன்ன நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details