தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 26, 2020, 9:35 PM IST

ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: தட்டிக்கேட்டதற்கு ஆபாச பதிலளித்த பள்ளி நிர்வாகம்... வலைவீசும் காவல் துறை!

வேலூர்: அண்ணா சாலையில் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

vellore
vellore

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்துவரும் 8 வயது சிறுமியை, சில நாள்களுக்கு முன்பு உணவு இடைவேளையின்போது ஒருவர் மிக்சர் வாங்கித் தருவதாகச் சொல்லி பள்ளியின் கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.

இது குறித்து, அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், சிறுமியை பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அதன்பின் அவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் ஆபாசமாகப் பதிலளித்து மிரட்டியதாகத் கூறப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு வலைவீச்சு

அதனால் சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாலியல் துன்புறுத்தல் செய்தவர், அதைக் கேட்டதற்கு மிரட்டல்விடுத்த தனியார் பள்ளியின் தலைமையாசிரியர், உதவித் தலைமையாசிரியர் ஆகியோர் மீது புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:மகளுக்குப் பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details