Life convict Murugan appears before court: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கரோனா ஊரடங்கின்போது பெண்கள் தனிச் சிறையில் இருக்கும் நளினியிடம் மாதத்திற்கு ஒரு முறை வீடியோ கால் மூலம் பேச சிறைத்துறை அனுமதி அளித்தது.
அப்போது வீடியோ கால் மூலம் வெளி நபர்களிடம் முருகன் பேசியதாக சிறைத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு இன்று (டிசம்பர் 27) வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் எண் 1-ல் விசாரணைக்கு வந்தது. நீதிபதி முகிலாம்பிகை முன் ஆஜரான முருகன், அவர் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.