வேலூர்:ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து சாது சன்னியாசிகள் பாதுகாப்பு சமிதி சார்பில் 4ஆம் ஆண்டு அண்ணாமலையார் திருக்குடை விழாவானது நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் விழாவிற்கு வேலூரில் இருந்து திருக்குடைகள் அனுப்பும் நிகழ்ச்சி சிவ ஸ்ரீ பிரத்யங்கரா தாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சாதுக்கள் சன்னியாசிகள் துறவிகள் பலரும் கலந்துக்கொண்டனர். இங்கிருந்து குடைகளை எடுத்துச் சென்று திருவண்ணாமலை ஆலயத்திற்கு விழாவுக்காக ஒப்படைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமி, ஜலகண்டீஸ்வரர் ஆலய செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோரும் திரளான சாதுக்கள் துறவிகளும் கலந்துகொண்டனர்.