வேலூர்:ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 30ஆம் ஆண்டு விழா இன்று (மே8) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 10,008 பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இன்று (மே8) காலை 9 மணி அளவில் மஞ்சள் நீர் கலசங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து நாராயணி பீடத்தின் சுயம்பு அம்மனுக்கு தங்கள் கைகளால் பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். இதனைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் ஸ்ரீ நாராயணி மூலமந்திர யாகம் நடந்தது.