தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 4, 2019, 9:31 AM IST

ETV Bharat / state

பள்ளிவாசலில் 50,000 மதிப்புள்ள கட்டுமானப் பொருட்கள் திருட்டு

வேலூர்: வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள கட்டுமானப் பொருட்கள் , எலக்ட்ரானிக் பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

mosque


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ளது.

நேற்று அங்கு யாரும் இல்லாத நேரம் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்து பொருட்களைத் திருடிக்கொண்டு தப்பியோடினர்.

இந்த காட்சி பள்ளிவாசலில் வைக்கப்பட்டு இருக்கும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

திருட்டு நடந்த பள்ளிவாசல்

அதைத்தொடர்ந்து, பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.50000 என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details