தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 23, 2019, 2:27 PM IST

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கையில் வாக்குவாதம் குடியாத்தத்தில் பரபரப்பு...!

வேலூர்: வாக்கு எண்ணும் அறையில் முகவர், அலுவலர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

File pic

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது எட்டாவது சுற்றில் ஐந்தாவது மேஜையில் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என முகவர்கள் தேர்தல் பொது பார்வையாளர்களிடம் கோரிக்கை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தொகுதியின் வேட்பாளர்கள் மறு எண்ணிக்கை வேண்டாம் என கூறினர். 5 நிமிட தாமத்திற்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details