வேலூர், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்க விருந்தனர்.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், முன்னாள் ஊராட்சி செயலாளர் முரளி என்பவர் 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரி வீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிலமணிநேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருண் பிரசாத் பேச்சுவார்த்தை நடத்தியதால் அனைவரும் அமைதி காத்தனர். இறுதியாக கிராம சபைக் கூட்டம் நடைபெற்று பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.