தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்னல் தாக்கி ஆடு, மாடு பலி ! - மழை தொடர்பான செய்திகள்

வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மின்னல் தாக்கியதில் ஆடு, மாடு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த உயிரினங்கள்
உயிரிழந்த உயிரினங்கள்

By

Published : Apr 24, 2021, 1:49 PM IST

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல். 23) மாலை 5.00 மணியளவில் சத்துவாச்சாரி, கிரீன் சர்க்கில், ரங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போது குடியாத்தம் அடுத்த தனகொண்டபல்லி பகுதியை சேர்ந்த சரோஜா என்பருக்கு சொந்தமான மாடு, காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகள், 3 ஆட்டு குட்டிகள் என மொத்தம் 7 ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன.

ABOUT THE AUTHOR

...view details