வேலூர்: குடியாத்தம் அடுத்த மத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (48) இவர் தனது மகன் கோபியுடன் (22) குடியாத்தத்தில் இருந்து சொந்த ஊரான பரதராமி மத்தூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
மழை காரணமாக தண்ணீர்பந்தல் கிராமத்தில் சாலையோரம் இருந்த காய்ந்த மரம் வேரோடு சாய்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை வெங்கடேசன், மகன் கோபி மீது விழுந்தது.