தமிழ்நாடு

tamil nadu

ஜவ்வாது மலையில் கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!

By

Published : Nov 24, 2019, 12:01 AM IST

வேலூர்: ஜவ்வாது மலையில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வந்த விவசாயியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

cannabis in Vellore

வேலூர் மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே உள்ள புதூர் நாடு புங்கபட்டு மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (42). இவர் விவசாயம் செய்து வருகிறார். சுப்பிரமணி தனக்கு சொந்தமான நிலத்தில் அவரை செடியோடு கஞ்சா செடிகள் பயிரிட்டு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வனத்துறையினர் சுப்பிரமணியின் நிலத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அவரை செடியுடன் 150 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின், வனத்துறையினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

திருப்பூரில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details