தமிழ்நாடு

tamil nadu

'பேரம் முடிந்தவுடன் தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பிரதமர் பேசுவார்'

By

Published : Dec 27, 2020, 3:46 PM IST

வேலூர் : தமிழ்நாட்டை ஆளும் அரசுடன் பேரங்கள் முடிவடைந்த பிறகு, இங்கு நடைபெறாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து பிரதமர் பேசுவார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

dmk-gs-criticize-prime-minister-modi-on-local-body-election
dmk-gs-criticize-prime-minister-modi-on-local-body-election

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ’அதிமுகவை நிராகராப்போம்’ என்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தை திமுகவினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்தக் கூட்டம் இன்று (டிச.27) ஏரந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தும் திமுகவினரை கைது செய்வது அரசாங்கத்தின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல். கிராம சபை என சொல்லக்கூடாது என சட்டம் எதுவும் கிடையாது. நாங்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி மக்களிடம் பேசுவது ஆளும் கட்சியினருக்குப் பொறுக்கவில்லை.

மக்கள் கிராம சபை கூட்டத்தில் துரைமுருகன்

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்திய புதுச்சேரி அரசை விமர்சித்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டை ஆளும் அரசுடன் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார். அவை முடிந்த பிறகு தேர்தல் குறித்து கருத்து சொல்வார் என விமர்சித்தார்.

யாதவர் சமுதாயத்தை இழிவாகப் பேசியதாகக் கூறி, அமைச்சர் செல்லூர் ராஜுவைக் கண்டித்து ராமநாதபுரத்தில் போராட்டம் நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”தவறாகப் பேசினால்தானே அவர் செல்லூர் ராஜு” என்றும் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: கிராம சபைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details