தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி, வேலூரில் இன்று (ஏப்ரல் 25) கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட சத்துவாச்சாரி, காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மண்டி தெரு ஆகிய இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.