தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் பயோ டீசல் திட்டம் தொடக்கம் - வேலூரில் ரூகோ திட்டம் துவங்கி வைப்பு

வேலூரில் உணவு பொருள் பாதுகாப்பு துறை சார்பாக பயோ டீசல்(மறுசுழற்சி) திட்டம், நேற்று (ஜூலை 13) தொடங்கப்பட்டது.

ruco scheme initiated in vellore  ruco scheme  Department of Food Security initiated ruco scheme in vellore  vellore collector  vellore news  vellore latest news  Repurposed Used Cooking Oil  பழைய எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டம்  வேலூர் மாவட்ட ஆட்சியர்  பழைய எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு  பழைய எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் ரூகோ திட்டம்  ரூகோ திட்டம்  வேலூரில் ரூகோ திட்டம் துவங்கி வைப்பு  வேலூர் செய்திகள்
வேலூர் மாவட்ட ஆட்சியர்

By

Published : Jul 14, 2021, 8:05 AM IST

வேலூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் துவங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ரூகோ(RUCO) திட்டம், நேற்று (ஜூலை 13) வேலூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தினை, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்.

RUCO(Repurposed Used Cooking Oil)திட்டம்

இத் திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் உள்ள சிறிய, பெரிய உணவகங்களில், பயன்படுத்தப்பட்ட பழைய எண்ணெய் சேகரித்து, பயோ டீசலாக (Bio Diesel) மறுசுழற்சி செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம், லிட்டருக்கு ஏற்ப அதற்கான கட்டணத்தை உணவகங்களுக்கு வழங்கி பெற்றுக்கொள்ளும். மேலும் பெறப்பட்ட எண்ணெய் பயோ டீசலாக (Bio Diesel) மறுசுழற்சி செய்யப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.

2018ம் ஆண்டு FSSAI யால் (Food Safety and Standards Authority of India) துவக்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து வேலூர் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், “முதற்கட்டமாக வேலூரில் உள்ள 14 உணவகங்களில் ஜூலை 14 முதல் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளோம். தொடர்ந்து அடுத்த ஓரிரு வாரங்களில் எஞ்சி உள்ள ஏனைய ஓட்டல்களிலும் இந்த திட்டத்தினை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

பழைய எண்ணையை பெறும் பயோ டீசல் (Bio Diesel) நிறுவனம் லிட்டருக்கு ரூபாய் 35 கொடுத்து பெற்றுக்கொள்கின்றனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கட சுப்பு ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாட்டு கோயில் சிலைகள் மீட்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

ABOUT THE AUTHOR

...view details