தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 4, 2020, 3:20 PM IST

ETV Bharat / state

கற்பகம் நுகர்வோர் கூட்டுறவுச் சிறப்பங்காடியில் பட்டாசு விற்பனை!

வேலூர்: தீபாவளியை முன்னிட்டு கற்பகம் நுகர்வோர் கூட்டுறவுச் சிறப்பங்காடியில் பட்டாசு விற்பனையை வேலூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

crackers-sales-on-karpagam-cooperative-supermarket
crackers-sales-on-karpagam-cooperative-supermarket

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், ஆற்காடு, திருப்பத்தூர், வாணியம்பாடி, காட்பாடி ஆகிய இடங்களில் கற்பகம் அங்காடி மூலம் பட்டாசு விற்பனை செய்யப்பட திட்டமிடப்பட்டது.

அதன்படி இன்று (நவ. 04) விற்பனை தொடங்கியது. அதனை மாவட்ட ஆட்சியர், சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். இங்கு சந்தை விலையைவிட குறைவான விலைக்கே பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தாண்டு ரூ.2.5 கோடிக்கு பட்டாசு கொள்முதல்செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ.95 லட்சத்திற்கு பட்டாசுகள் வரப்பெற்றுள்ளன. இது குறித்து ஆட்சியர், பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், பட்டாசுகளை வாங்கிச் செல்லுமாறு கோரிக்கைவைத்தார்.

இதையும் படிங்க:'பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details