தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் 50 பேர் கைது! - தநேய ஜனநாயக கட்சியினர்

திருப்பத்தூர்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

thirupathur
thirupathur

By

Published : Dec 16, 2019, 7:41 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சட்ட நகலை எரித்தும், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியும் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் ஈடுபட்டனர்.

போராட்டத்தைத் தடுக்க 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். சட்ட நகலை எரிக்கும் போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்கார்கள் 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, பின் விடுவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சியினர்

இதையும் படிங்க: டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம்; பேருந்துகளுக்கு தீ வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details