வேலூா் மாவட்டம் சோளிங்கபுரம் ரயில் நிலையம் பகுதியில் தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கி ரயில் தண்டவாளத்தில் ஜல்லிகற்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வழக்கம்போல் நேற்றிரவு பணிமுடிந்து ரயில் நிலைய வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி துா்காபிரசாத் (22) என்பவரின் மனைவி பார்வதி அருகில் படுத்திருந்த ஐந்து மாதக் குழந்தையை யாருக்கும் தெரியாமல் தூக்கியுள்ளார். அப்போது குழந்தை கத்தியதால், பெற்றோர் எழுந்து என்வென்று பார்பதற்குள் அந்த நபர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.