ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு ஹரி கிருஷ்ணன் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தான். இந்நிலையில் நேற்றிரவு ஹரி கிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு அருகிலுள்ள நீர்தேக்கத் தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.
நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லையே என சதீஷ் வீட்டின் அருகே தேடியபோது, நீர்தேக்கத் தொட்டியில் குழந்தை விழுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் அவர் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது எனத் தெரிவித்தனர்.