தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்புமனுத் தாக்கல் செய்ய குதிரையில் வந்த வேட்பாளர்

வேலூர்: வேட்பாளர் ஒருவர் குதிரையில் வந்து நூதன முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

By

Published : Jul 12, 2019, 8:10 PM IST

வேட்பாளர்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கல் செய்ய குதிரையில் வந்த வேட்பாளர்

வேலூர் தொகுதியில் மட்டும் நடக்கும் மக்களவைத் தேர்தல் என்பதால் தமிழ்நாடு முழுவதும் இத்தேர்தல் பெரிதும் கவனிக்கப்படுகிறது. இதனால் சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் வித்தியாசமான முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய குதிரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘இதுவரை சட்டமன்றம், நாடாளுமன்றம் என 32 முறை போட்டியிட்டுள்ளேன். தற்போது 33ஆவது முறையாக வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details