தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்: 3 பேர் மரணம்! - Two-wheeler collided head-on

வேலூர்: பேர்ணாம்பட்டு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

accident
accident

By

Published : Aug 1, 2020, 10:24 PM IST

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே செல்லப்பள்ளி கிராமத்தில் பேர்ணாம்பட்டிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில், நேர் எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கொத்தப்பல்லியைச் சேர்ந்த நிதிஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு வாகனத்தில் வந்த சாத்கர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (32), இவரது மகள்கள் தேவயானி(7), சந்தியா ஆகியோர் படுகாயமடைந்தன நிலையில், ஆம்புலன்ஸில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், தந்தை கார்த்தி, மகள் தேவயானி ஆகியோர் உயிரிழந்தனர்.

கார்த்தியின் மற்றொரு மகள் சந்தியா(11) குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேர்ணாம்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, 7 வயது மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:ஆடி மாதம் பெற்றோர் வீட்டுக்கு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details