வேலூர்: பேரணாம்பட்டை அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (77). இவர் தனது மகன்கள், குடும்பத்தினருடன் நேற்று (ஜூன் 22) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேசிய சரஸ்வதி, "எனது மகன்கள் ரமேஷ், பூபாலன் ஆகியோர் பேரணாம்பட்டு பிரதான சாலையில் மளிகைக்கடை நடத்திவந்தனர்.
பல ஆண்டுகளாக அங்கு கடை நடத்திவருகிறோம். கடை அமைந்துள்ள இடம் ஒரு கோயிலுக்குச் சொந்தமான இடம் என்பதால் நிலத்திற்கான தரை வாடகையை முறையாகச் செலுத்திவந்தோம்.