வேலூர்: நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ரங்காபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் வேலூர் கோட்டை எதிரே மக்கான் சிக்னலில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த ஒவ்வொரு திட்டமும் அற்புதமானது. அதை 10 ஆண்டுகளாக கேலி பேசி வந்த திமுக சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ளது. ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஆலையை எதிர்த்தவர்கள் இன்று ரூ.2,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.