தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணின் இரண்டாம் கணவர் வெட்டி கொலை: முதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு! - அம்மனாங்குட்டை கொலை வழக்கு

வேலூர்: அம்மனாங்குட்டை பகுதியில் தனது மனைவியை திருமணம் செய்துகொண்டு வெளியூர் சென்றவரை கொலை செய்த முன்னாள் கணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெண்ணின் இரண்டாம் கணவர் வெட்டி கொலை
பெண்ணின் இரண்டாம் கணவர் வெட்டி கொலை

By

Published : Oct 6, 2020, 2:49 PM IST

வேலூர் மாவட்டம் அம்மனாங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவியை திருமணம் செய்துகொண்டு வெளியூர் சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று (அக். 05) கோபி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையறிந்த, சரவணன், கோபி இருக்கும் இடத்திற்குச் சென்று அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்பு, உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த கோபியை மீட்ட அக்கம் பக்கத்தினர், வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிசையளித்து வந்த நிலையில் இன்று (அக். 06) கோபி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர், சரவணனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவர் கொலை வழக்கு: 11 ஆண்டுகள் கழித்து குற்றவாளி கைது

ABOUT THE AUTHOR

...view details