வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த சேர்க்காடு கம்மவான் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (42) இவரது மனைவி மஞ்சுளா (38). இவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி பாலாஜி, மஞ்சுளா இருவரும் வெளியில் சென்றதால், சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அதேபகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ்(62) என்பவர், சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சம்பவம் தொடர்பாக யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மோகன்தாஸ் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்த போது குழந்தை தனக்கு நடந்த கொடுமைகளை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பாலாஜி, மோகன்தாஸ் மீது திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.