வேலூர்: குடியாத்தம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் சிசு ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் குடியாத்தம் நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் கால்வாயில் இருந்த வளர்ச்சி அடையாத சுமார் 5 மாத பெண் சிசுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப்பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.