வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் (TSO) தேவி, சிறப்பு வருவாய் ஆய்வாளர் (Special RI) ஜோதி ராமலிங்கம் ஆகியோர் தாழையாத்தம் கிராமத்தில் நேற்று (நவ. 04) இரவு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், கர்நாடக பதிவெண் கொண்ட லாரி ஒன்று சாலையில் சென்றது. அதனைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் தேங்காய் மூட்டைகளுக்கு அடியில் 381 மூட்டைகளில் சுமார் 19 ஆயிரத்து ஆறு கிலோ எடையுள்ள ரேசன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது.