தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ரேசன் அரிசி பறக்கும்படையினரால் பறிமுதல்

வேலூர்: பொய்கை மோட்டூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

15 tonne ration rice seized
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரேசன் அரிசி பறிமுதல்

By

Published : Sep 29, 2020, 8:43 AM IST

வேலூர் மாவட்டம் பொய்கை மோட்டூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சன்முக சுந்தரத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையிலான பறக்கும் படையினர், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி பானு ஆகியோர் அரிசி பதுக்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்றனர்.

அப்போது, பொய்கை மோட்டூர் பகுதியிலுள்ள அம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டிலும், மாரியம்மன் கோயிலின் பின்புறமும் சுமார் 15 டன் அளவிலான ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்

இதைத்தொடர்ந்து அந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது யார், அரிசி எங்கிருந்து வந்தது என்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: கரோனாவிற்கு கணவரை பறிகொடுத்த பெண்: நெகிழவைத்த இறுதித் தருணம்!

ABOUT THE AUTHOR

...view details