தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவி தற்கொலை கடிதத்தால் சிக்கிய இளைஞர்! - கல்லூரி மாணவி தற்கொலை

திருச்சி: வளநாடு அருகே கல்லூரி மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி தற்கொலை
கல்லூரி மாணவி தற்கொலை

By

Published : Jan 4, 2021, 11:47 AM IST

திருச்சி மாவட்டம் வளநாடு அருகேவுள்ள வேம்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (19).

கல்லூரி மாணவியான இவர் டிச. 29ஆம் தேதி வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், தன் சாவுக்கு காரணம் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட நபரின் செல்ஃபோன் எண்ணை கடிதத்தில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த வளநாடு காவல் துறையினர், விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கடிதத்தில் இருந்த செல்ஃபோன் எண்ணின் உரிமையாளரான திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் ராமராஜ் என்பவர் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

கடிதத்தால் சிக்கிய இளைஞர்:

விசாரணையில், ராமராஜும், பாக்கியலட்சுமியும் காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும், பாக்கியலெட்சுமி ராமராஜைவிட்டு விலகுவதாக கூறியதால், அப்பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதன் காரணமாக அப்பெண் தற்கொலை செய்துகொண்டது அம்பலமானது.

இதையடுத்து, ராமராஜை மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணமல்லி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: குமரியில் தந்தை உயிரிழந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details